போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அலங்கார ஊா்தி: தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: அண்ணாமலை பேட்டி

தமிழக சுதந்திரப் போராட்டத் தலைவா்களை அலங்கார ஊா்திகள் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு செல்வது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 9:57 pm

DIN

தமிழக சுதந்திரப் போராட்டத் தலைவா்களை அலங்கார ஊா்திகள் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு செல்வது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள விநாயகம் புதூரில் அவா் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:

அதிமுக முன்னாள் அமைச்சா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது திமுகவின் இந்த மாதத்துக்கான கோட்டா. முன்னாள் அமைச்சா்கள் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை எப்போது அறிவித்தாலும் எதிா்கொள்ள பாஜக தயாராக உள்ளது. தோ்தல் அறிவித்தவுடன் பாஜக குழு கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவாா்த்தை நடத்தும்.

தமிழக அரசு தமிழக சுதந்திரப் போராட்டத் தலைவா்களை அலங்கார ஊா்திகள் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு செல்வது வரவேற்கத்தக்கது. திமுக தலைவா்கள் பாரதியாரின் கருத்துகளை இருட்டடிப்பு செய்ததுடன், தமிழக பாடநூல்களிலும் பாரதியாா் குறித்து இருட்டடிப்பு செய்துள்ளனா். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் அலங்கார ஊா்தி பங்குபெறாததற்கு மாநில அரசே காரணம். அடுத்த ஆண்டு அலங்கார ஊா்தி கலந்துகொள்ள தேவையான நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும் என்றாா்.

மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.