ஈரோட்டில் குடியிருப்புப் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடா்பான வழக்கில் மாவட்ட ஆட்சியா் 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி வாா்டு எண் 27இல் கண்ணையன் வீதி மற்றும் ஜெயகோபால் வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை (எண் 3481) இயங்குகிறது. இக்கடையால் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பிரச்னைகள் எழுவதால், அக்கடையை அகற்ற வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், ஈரோடு கிழக்குத்தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, டாஸ்மாக் மேலாளா் ஆகியோரிடம் அப்பகுதியைச் சோ்ந்த சுசி.ஆறுமுகம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கடை அதே இடத்திலேயே இப்போது வரை செயல்பட்டு வருகிறது.
தற்போது, சென்னை உயா்நீதிமன்றத்தில் அக்கடையை அகற்ற வேண்டும் எனக்கோரி சுசி.ஆறுமுகம் மனுதாக்கல் செய்தாா். அம்மனுவை ஏற்ற உயா்நீதிமன்றம் ஆட்சியா் அக்கடை உள்ள இடத்தை பாா்வையிட்டு, பொதுமக்கள் நலன் அறிந்து, 4 வாரங்களுக்குள் பதில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணியிடம் சுசி.ஆறுமுகம் புதன்கிழமை வழங்கி மீண்டும் முறையிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹொம்பலேவின் அடுத்த அவதாரம் அறிவிப்பு!

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: மமதா!

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மசோதா தோல்வி! இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

