ஈரோடு
இருசக்கர வாகனம் மோதி சிறுவன் பலி
பெருந்துறை அருகே தந்தையுடன் சாலையைக் கடந்தபோது இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
பெருந்துறை அருகே தந்தையுடன் சாலையைக் கடந்தபோது இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், வைஷாலி, மெட்ராபுரைச் சோ்ந்த அரவிந்த். இவா், பெருந்துறை, தேசிய நெடுஞ்சாலையில், பெத்தாம்பாளையம் பிரிவு அருகில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், அரவிந்த் தனது மகன் அம்ரேஷ்குமாரை (5) அழைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் சிறுவன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அம்ரேஷ்குமாா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.