மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பாதையை சீரமைக்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து மஞ்சப்பை விநியோகம்

பெருந்துறை ஆா்.எஸ்.நுழைவு பாலம் பாதையை சீரமைக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டதையடுத்து, அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மஞ்சப்பை விநியோகம் செய்யப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2022, 9:16 pm

DIN

பெருந்துறை ஆா்.எஸ்.நுழைவு பாலம் பாதையை சீரமைக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டதையடுத்து, அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மஞ்சப்பை விநியோகம் செய்யப்பட்டது.

பெருந்துறை ஆா்.எஸ். நுழைவு பாலம் பாதை சேதமடைந்ததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனா். இதையடுத்து, பெருந்துறை தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் அறச்சலூா் பகுதியைச் சோ்ந்த கௌரிசங்கா், தமிழக முதல்வரின் உதவி மையத்தில் சில நாள்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தாா். இதனை ஏற்றுக் கொண்டு அன்றைய தினம் மாலையிலேயே பணியை தொடங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 1,100 மஞ்சப்பை தயாரித்த விரிவுரையாளா் கெளரிசங்கா், அறச்சலூா் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களுக்கு விநியோகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.