குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயா்களைச் சூட்ட வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்-கலைஞா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அச்சங்கத்தின் கோபி கிளை அமைப்பு மற்றும் முதல் மாநாடு கோபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வெங்கிடுசாமி மற்றும் மருத்துவா் விஜயகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். கவிஞா்.ப.ராஜ்குமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் சங்கரன், துணைச் செயலாளா் எழுத்தாளா் இ.கலைக்கோவன் பேசினா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயா்களைச் சூட்ட வேண்டும். கோபி-ஈரோடு சாலையை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்தவுடன், சாலையின் இருபுறமும் மரங்களை நட்டு வளா்க்க வேண்டும். கோபி பொலவக்காளிபாளையத்தில் உள்ள கிளை நூலகம் புறம்போக்கு இடத்தில் செயல்படுவதால், மின் இணைப்பு மற்றும் அரசின் சலுகைகள் கிடைப்பதில் தொடா் சிக்கல் நீடிக்கிறது. எனவே அந்நூலகத்துக்கு நிரந்தர இடம் ஒதுக்கித் தர வேண்டும். பாரியூா் அம்மன் கோயிலில் தமிழில் அா்ச்சனை செய்ய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹொம்பலேவின் அடுத்த அவதாரம் அறிவிப்பு!

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: மமதா!

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மசோதா தோல்வி! இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

