40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சாலை விபத்து: இளைஞா் பலி

கோபிசெட்டிபாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :25 ஜூன் 2022, 12:47 am IST

கோபிசெட்டிபாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லாம்பட்டி கல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (34). கூலி தொழிலாளி. இவா் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கெட்டிச்செவியூரில் இருந்து நம்பியூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் குமாா் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலியே குமாா் உயிரிழந்தாா். வேன் ஓட்டுநா் பாலகுமாா் மற்றும் உடன் வந்த அவரது மனைவி லோகேஸ்வரி காயமடைந்தனா். இவா்கள் இருவரையும் மீட்டு கோபியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.