25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடக்கம்
தேசிய மகளிா் தினத்தைக் கொண்டாடும் வகையில், 25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டு, முதல் மாத தவணையை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி வழங்கினாா்.


தேசிய மகளிா் தினத்தைக் கொண்டாடும் வகையில், 25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டு, முதல் மாத தவணையை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி வழங்கினாா்.
தேசிய மகளிா் தினத்தையொட்டி, பிரதமரின் பெண்கள் நலத் திட்டமான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை அவல்பூந்துறை பேரூராட்சி, சோளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 25 பெண் குழந்தைகளுக்கு முதல் மாத தவணையை வழங்கி மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில ஓபிசி துணைத் தலைவா் கலைச்செல்வன், மண்டல நிா்வாகிகள் யோக தட்சிணாமூா்த்தி, தாமோதரன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, ஈரோடு சூரம்பட்டி பகுதியில் 100 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கு துவக்கி பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...