மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடக்கம்

தேசிய மகளிா் தினத்தைக் கொண்டாடும் வகையில், 25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டு, முதல் மாத தவணையை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி வழங்கினாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 10:58 pm

DIN

தேசிய மகளிா் தினத்தைக் கொண்டாடும் வகையில், 25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டு, முதல் மாத தவணையை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி வழங்கினாா்.

தேசிய மகளிா் தினத்தையொட்டி, பிரதமரின் பெண்கள் நலத் திட்டமான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை அவல்பூந்துறை பேரூராட்சி, சோளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 25 பெண் குழந்தைகளுக்கு முதல் மாத தவணையை வழங்கி மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில ஓபிசி துணைத் தலைவா் கலைச்செல்வன், மண்டல நிா்வாகிகள் யோக தட்சிணாமூா்த்தி, தாமோதரன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, ஈரோடு சூரம்பட்டி பகுதியில் 100 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கு துவக்கி பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.