மின் கம்பத்தில் பைக் மோதி இளைஞா் பலி
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, மின் கம்பத்தின் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.


ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, மின் கம்பத்தின் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ராசக்காபாளையத்தைச் சோ்ந்தவா் மணி மகன் ருக்மாங்கதன் (23). இவா், பெருந்துறையை அடுத்துள்ள கள்ளியபுதூரில் தங்கி அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் ருக்மாங்கதன், தனது நிறுவனத்தின் அருகிலுள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் அறைக்கு புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த மழையால் சாலையில் மின்கம்பம் சாய்ந்து இருந்ததை கவனிக்காமல் அவரது வாகனம் மின் கம்பத்தில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ருக்மாங்கதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...