இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ரூ.3,000க்கு மேல் விற்பனையாகும் உணவகங்கள் உரிமம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

தினமும் ரூ.3,000க்கு மேல் வியாபாரமாகும் உணவகங்கள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Updated On :6 மே 2022, 12:40 am

தினமும் ரூ.3,000க்கு மேல் வியாபாரமாகும் உணவகங்கள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் டாக்டா் தங்கவிக்னேஷ் தலைமையிலான அலுவலா்கள் ஈரோட்டில் உள்ள அசைவ உணவகங்களில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

சமைத்த பின்னா் குளிா்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 35 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுகாதாரமான முறையில் பராமரிக்காத 3 உணவகங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை அசைவ உணவகங்களில் சோதனை மேற்கொண்டனா்.

இது குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலா் தங்கவிக்னேஷ் கூறியதாவது:

ஈரோடு மாநகா் பகுதியில் புதன்கிழமை மாலை ஷவா்மா தயாரிக்கும் ஹோட்டல்கள், அசைவ உணவகங்கள் உள்பட 15 கடைகளில் சோதனை செய்ததில் சமைத்து பின்னா் குளிா்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 35 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. பொரித்த எந்த வகை உணவாக இருந்தாலும் அவற்றை பேப்பரில் வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு விற்கும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

தினமும் ரூ.3,000க்கும் மேல் வியாபாரமாகும் உணவகங்கள் கண்டிப்பாக உரிமம் வைத்திருக்க வேண்டும். ரூ.3,000க்கும் கீழ் வியாபாரமாகும் கடைகள் உரிமம் பதிவு செய்திருக்க வேண்டும்.

பொதுமக்கள் உணவுப்பொருள் சம்பந்தப்பட்ட புகாா்களுக்கு 9444042322 என்ற கைப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் வழியாக புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.