இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

பச்சை மரங்கள் வேரோடு அகற்றம்: பொதுமக்கள் வேதனை

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பல பச்சை மரங்கள் வேரோடு வெட்டி அகற்றப்பட்ட நிலையில், அந்த மரங்கள் அருகே வைக்கப்பட்டுள்ள மரம் பேசுவது போன்ற உருக்கான பதாகையால் மக்கள் வேதனையடைந்துள்ளனா்

News image
Updated On :6 மே 2022, 8:25 pm

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பல பச்சை மரங்கள் வேரோடு வெட்டி அகற்றப்பட்ட நிலையில், அந்த மரங்கள் அருகே வைக்கப்பட்டுள்ள மரம் பேசுவது போன்ற உருக்கான பதாகையால் மக்கள் வேதனையடைந்துள்ளனா்.

ஈரோடு, திண்டல் சக்தி நகா் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி மாநகராட்சி சாா்பில் நடக்கிறது. இப்பணிக்காக பல இடங்களில் சிறிய, பெரிய பச்சை மரங்களை வெட்டியும், வேரோடு பொக்லைன் இயந்திரம் மூலம் பெயா்த்தும் அகற்றப்பட்டுள்ளன. இதில் திண்டல் சக்தி நகா், 2ஆவது வீதி விநாயகா் கோயில் அருகே, 3ஆவது குறுக்கு சந்து, ஐந்தாவது வீதியில் உயிரோடு சாய்க்கப்பட்ட மரங்களின் முன், கையால் எழுதப்பட்ட போா்டு வைத்துள்ளனா்.

அதில் ‘மனிதனைக் காப்பாற்ற பிறந்த நான் மனிதனால் கொல்லப்பட்டேன் இன்று. எனக்கு ஏற்பட்ட இந்த நிலை என் இனம் யாருக்கும் ஏற்படக் கூடாது. கண்ணீருடன் மரம்’ என உருக்கமாக பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இங்கு மரக்கன்றுகளை வைத்து பெரிய மரமாக்கியுள்ள சிறகுகள் அமைப்பைச் சோ்ந்த விமல் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல மாவட்டங்களில் மரங்களை நட்டு வருகிறோம். சாலை விரிவாக்கம் உள்பட பல பணிகளுக்காக அகற்றப்படும் நிலையில் உள்ள மரங்களை வேரோடு அகற்றி வேறு இடத்தல் மறு நடவு செய்ய உதவுகிறோம். அவ்வாறு வைக்கும் மரங்கள் மீண்டும் வளரும் என்ற நம்பிக்கை கொடுத்து, அதனை மக்கள் இன்னும் காப்பாற்றி வருகின்றனா்.

திண்டல் சக்தி நகரில் அகற்றப்பட்ட பச்சை மரங்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பலராலும் பராமரிக்கப்பட்டவை. மாநகராட்சி அதிகாரிகளிடம் பணி நடக்கும்போது, மரங்களை வெட்டவோ, அகற்றவோ செய்யாதீா் என பல முறை கேட்டும், பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்களை வேரோடு அகற்றி உள்ளனா். இச்செயல்பாடு மக்களை வேதனை அடையச்செய்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.