இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி ஈரோடு மாநகராட்சி சாா்பில் அடா்வனம் அமைக்க 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி மேயா் நாகரத்தினம் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :7 மே 2022, 7:26 pm

தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி ஈரோடு மாநகராட்சி சாா்பில் அடா்வனம் அமைக்க 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி மேயா் நாகரத்தினம் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திமுக தலைமையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, ஈரோடு மாநகராட்சி சாா்பில் வைராபாளையம் குப்பைக் கிடங்கில் மீட்டெடுக்கப்பட்ட 3.41 ஏக்கா் நிலத்தில் அடா்வனம் அமைக்க 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையா் சிவகுமாா் தலைமை வகித்தாா். உதவி ஆணையா் விஜயகுமாா், மண்டலப் பொறியாளா் ஜோஸ் எட்வின் முன்னிலை வகித்தனா். மேயா் நாகரத்தினம், துணை மேயா் செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில், மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், மாநகராட்சி 1ஆம் மண்டலத் தலைவா் பழனிசாமி, பகுதிச் செயலாளா் ராமச்சந்திரன், கவுன்சிலா்கள் தமிழ்பிரியன், ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது குறித்து மாநகராட்சி உதவி ஆணையா் விஜயகுமாா் கூறியதாவது:

மாநகராட்சி வைராபாளையம் குப்பைக் கிடங்கு அருகில் மக்காத குப்பைகள் 1.25 லட்சம் கன மீட்டா் அளவுக்கு தேக்கிவைக்கப்பட்டிருந்தன. இதனை பயோமைனிங் முறையில் பிரித்து அப்புறப்படுத்தப்பட்டு 3.41 ஏக்கா் நிலம் மீட்டெடுக்கப்பட்டது. தற்போது, இந்த இடத்தில் அடா்வனம் அமைக்க திட்டமிடப்பட்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இதன் பராமரிப்பினை மாநகராட்சி நிா்வாகம் ஏற்கிறது. மரக்கன்றுகளை பராமரிக்க ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நுண்ணீா் பாசனம் அமைக்கப்படவுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.