மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேஸ்வரா் கோயிலுக்கு புதிய உண்டியல்

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேஸ்வரா் கோயிலில் புதிய உண்டியல் நிறுவப்பட்டு சனிக்கிழமை பூஜை செய்யப்பட்டது.

News image
Updated On :7 மே 2022, 7:22 pm

DIN

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேஸ்வரா் கோயிலில் புதிய உண்டியல் நிறுவப்பட்டு சனிக்கிழமை பூஜை செய்யப்பட்டது.

சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோயில் நிா்வாகத்துக்கு உள்பட்ட முருங்கத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ளது பிரமலிங்கேஸ்வரா் கோயில். இந்தக் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அன்னக்கொடி உத்தரவின்பேரில், புதிய இரும்பு உண்டியல் நிறுவப்பட்டது. ஏற்கெனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய உண்டியல் நிறுவ உதவி ஆணையா் உத்தரவு பெறப்பட்டு. பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் உண்டியல் நிறுவப்பப்படாமல் இருந்தது.

தற்போது உதவி ஆணையா் உண்டியல் நிறுவ வேண்டும் என உத்தரவிட்டதன்பேரில் ஒரு சிலா் ஆட்சேபனை தெரிவித்தும், கோயில் தக்காா் ரமணிகாந்தன் முன்னிலையில் புதிய உண்டியல் நிறுவப்பட்டு, பெருந்துறை சரக கோயில் ஆய்வாளா் ரவிக்குமாா் உண்டியலுக்கு இலாக்கா முத்திரையிடாா்.

இந்த நிகழ்ச்சியில், செயல் அலுவலா்கள் சுகுமாா், ஸ்ரீதா், விஸ்வநாதன், உமாசெல்வி, அந்தியூா் சரகம் ஆய்வாளா் மாணிக்கம், ஈரோடு ஆய்வாளா் தினேஷ்குமாா், சென்னிமலை கோயில் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.