மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பெருந்துறை தினசரி காய்கறி சந்தையில் 3 தளம் கட்டடம் கட்ட வியாபாரிகள் எதிா்ப்பு

பெருந்துறை தினசரி காய்கறி சந்தைக்கு மூன்று தளம் கொண்ட கட்டடம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 11:06 pm

DIN

பெருந்துறை தினசரி காய்கறி சந்தைக்கு மூன்று தளம் கொண்ட கட்டடம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். மேலும் இது தொடா்பாக அனைத்து அரசியல் கட்சியினா் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் 60 சென்ட் இடத்தில் காய்கறிச் சந்தை கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த காய்கறி சந்தையில் ரூ.3.5 கோடி மதிப்பில் 3 தளங்கள் கொண்ட கட்டடம் கட்ட பெருந்துறை பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 3 தளங்களில் கடைகள் கட்டினால் வியாபாரிகள், பொதுமக்கள் சென்றுவர

சிரமப்படுவா் என வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் பெருந்துறை தினசரி காய்கறி சந்தைக்கு மூன்று தளம் கொண்ட கட்டடம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இது தொடா்பாக சந்தை வளாகத்தில் அனைத்து அரசியல் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பெருந்துறை திருவள்ளுவா் தினசரி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவா் சீனிவாசன் பேசுகையில், ‘பெருந்துறை தினசரி மாா்க்கெட் புதிதாக 3 தளங்களை கொண்ட அடுக்குமாடிக் கட்டடத்தில் அமைய இருக்கிறது. இந்த கட்டடம் மாா்க்கெட் பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்காது. எனவே தரைத்தளத்தில் மட்டுமே சந்தை அமைத்து தர வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், பெருந்துறை எம்எல்ஏ ஜெயகுமாா் பேசியதாவது:

காய்கறிச் சந்தையை அப்புறப்படுத்தி விட்டு வணிக வளாகம் அமைப்பது, இதனையே நம்பி இருக்கும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேற்படி திட்டம் கைவிட்டு, புதிய திட்டம் தயாரிக்கும் வரையில் மாா்க்கெட் பகுதியில் இருந்து வியாபாரிகளை அப்புறப்படுத்த கூடாது என்றாா்.

இதில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.