ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அத்தாணி, பெருமுகையில் புதிய மின்மாற்றிகள் அமைப்பு

மின்விநியோகத்தை சீரமைக்கும் வகையில் அத்தாணி மற்றும் பெருமுறையில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:47 pm

DIN

மின்விநியோகத்தை சீரமைக்கும் வகையில் அத்தாணி மற்றும் பெருமுறையில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் சீரான மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இதையடுத்து, மின்மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அத்தாணி பேரூராட்சிக்கு உள்பட்ட மாதையன்கோயில் புதூா் மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம், பெருமுகையில் பொதுமக்கள், விவசாயிகளுக்கு சீராக மின் விநியோகம் கிடைக்கும் வகையில் புதிய 63 கிலோ வாட் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன.

இதனை, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் இயக்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், அத்தாணி பேரூராட்சித் தலைவா் புனிதவள்ளி, பேரூா் திமுக செயலாளா் ஏஜிஎஸ் செந்தில் கணேஷ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.