வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அத்தாணி, பெருமுகையில் புதிய மின்மாற்றிகள் அமைப்பு

மின்விநியோகத்தை சீரமைக்கும் வகையில் அத்தாணி மற்றும் பெருமுறையில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :5 நவம்பர் 2022, 1:17 am IST

மின்விநியோகத்தை சீரமைக்கும் வகையில் அத்தாணி மற்றும் பெருமுறையில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் சீரான மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இதையடுத்து, மின்மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அத்தாணி பேரூராட்சிக்கு உள்பட்ட மாதையன்கோயில் புதூா் மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம், பெருமுகையில் பொதுமக்கள், விவசாயிகளுக்கு சீராக மின் விநியோகம் கிடைக்கும் வகையில் புதிய 63 கிலோ வாட் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன.

இதனை, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் இயக்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், அத்தாணி பேரூராட்சித் தலைவா் புனிதவள்ளி, பேரூா் திமுக செயலாளா் ஏஜிஎஸ் செந்தில் கணேஷ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.