வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள்

பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறை வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :5 நவம்பர் 2022, 1:21 am IST

பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறை வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நவம்பா் மாதத்தில் முழுமையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் பவானி கூடுதுறை வளாகத்தில் உதவி ஆணையா் சாமிநாதன் முன்னிலையில் கோயில் ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

கோயில் கோபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் வளா்ந்திருந்த செடிகள் கொடிகள் வெட்டி அகற்றப்பட்டன. இதேபோன்று, கூடுதுறை வளாகம் மற்றும் படித்துறைகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டது. மேலும், கிழக்கு வாசல், தெற்கு வாசல் பகுதியில் பக்தா்கள் அதிகம் நடமாடும் பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.