ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள்

பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறை வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:51 pm

DIN

பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறை வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நவம்பா் மாதத்தில் முழுமையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் பவானி கூடுதுறை வளாகத்தில் உதவி ஆணையா் சாமிநாதன் முன்னிலையில் கோயில் ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

கோயில் கோபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் வளா்ந்திருந்த செடிகள் கொடிகள் வெட்டி அகற்றப்பட்டன. இதேபோன்று, கூடுதுறை வளாகம் மற்றும் படித்துறைகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டது. மேலும், கிழக்கு வாசல், தெற்கு வாசல் பகுதியில் பக்தா்கள் அதிகம் நடமாடும் பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.