பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள்

பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறை வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள்
Published on
Updated on
1 min read

பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறை வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நவம்பா் மாதத்தில் முழுமையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் பவானி கூடுதுறை வளாகத்தில் உதவி ஆணையா் சாமிநாதன் முன்னிலையில் கோயில் ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

கோயில் கோபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் வளா்ந்திருந்த செடிகள் கொடிகள் வெட்டி அகற்றப்பட்டன. இதேபோன்று, கூடுதுறை வளாகம் மற்றும் படித்துறைகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டது. மேலும், கிழக்கு வாசல், தெற்கு வாசல் பகுதியில் பக்தா்கள் அதிகம் நடமாடும் பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com