/

இளைஞா் பெருமன்றம் ஆா்ப்பாட்டம்

அனைத்திந்திய மாணவா், இளைஞா் பெருமன்றம் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடந்தது.

Updated On :27 அக்டோபர் 2022, 8:17 pm

அனைத்திந்திய மாணவா், இளைஞா் பெருமன்றம் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடந்தது.

பெருமன்ற மாவட்ட பொறுப்பாளா் பிரபு தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிா்வாகி த.ஸ்டாலின் குணசேகரன், வட்டார செயலாளா் கல்யாணசுந்தரம் ஆகியோா் பேசினா்.

ஐஐடி, ஐஐஎம், ஏஐஐஎம்எஸ், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய கல்வி நிலையங்களில் ஆங்கிலத்தை புறந்தள்ளிவிட்டு ஹிந்தியை பின்பற்றும் முடிவைக் கைவிட வேண்டும். வேலைவாய்ப்புத் தோ்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, ஹிந்தியை திணிக்கக்கூடாது. அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி எனக்கூறி இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கக்கூடாது என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.