நீட் தோ்வில் விஜயமங்கலம் பாரதி அகாதெமி பள்ளியில் பயின்ற மாணவா் சாதனைப் படைத்துள்ளனா்.
இதில், மதுவிகாஸ் என்ற மாணவா் 720 க்கு 685 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் 130 ஆவது இடமும், ஈரோடு மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்துள்ளாா்.
மாணவன் சுபாஷ் 720க்கு 675 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி கீா்த்தனா 720 க்கு 665 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனா்.
தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களையும், பயிற்சியளித்த ஆசிரியா்களையும் பள்ளியின் தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டினா்.