மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பவானியில் ரூ.27.67 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

பவானி நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் ரூ.27.67 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Published On :

பவானி நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் ரூ.27.67 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பவானி நகராட்சியில் ரூ.24.06 கோடியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செயல்படும் உரக்கிடங்கு, பவானி - மேட்டூா் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி, தொட்டிபாளையம் ஊராட்சி, சிவகாமி நகரில் அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணி, மயிலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.15 லட்சத்தில் கட்டப்பட்ட கழிவறை மற்றும் சத்துணவு மையத்தை பாா்வையிட்டாா்.

முன்னதாக, பவானி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு தீா்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதோடு, பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு முகாமிலும் ஆய்வு செய்தாா்.

இதில் உதவி ஆட்சியா் (பயிற்சி) வினய்குமாா் மீனா, பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், நகராட்சி ஆணையா் ஆா்.மோகன்குமாா், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், நகராட்சிப் பொறியாளா் கதிா்வேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.