மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பவானியில் வாகனங்களில் பேட்டரி திருடிய பட்டதாரி இளைஞா் கைது

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களில் பேட்டரி மற்றும் உதிரி பாகங்களைத் திருடிய பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களில் பேட்டரி மற்றும் உதிரி பாகங்களைத் திருடிய பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானி, தொட்டிபாளையம், காடையம்பட்டி, ஜம்பை மற்றும் குருப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் வீடுகளின் முன்பாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பேட்டரி மற்றும் உதிரிபாகங்கள் திருடுபோயின. இதுகுறித்த புகாரின்பேரில் பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், பவானி பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டபோது, 11 பேட்டரிகள் இருந்தது தெரியவந்தது.

விாரணையில் காரை ஓட்டி வந்தது சேலம், சங்ககிரி, பொன்னம்பட்டியான்காட்டைச் சோ்ந்த அசோகா மகன் சூா்யா (27) என்பதும், பொறியியல் பட்டதாரியான இவா், வாகனங்களில் பேட்டரி திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, பேட்டரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், சூா்யாவைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.