தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரூ.500 கோடி மதிப்பிலான வக்பு வாரிய சொத்துகள் மீட்பு: அமைச்சா் செஞ்சி மஸ்தான்

வக்பு வாரியத்துக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டுள்ளது என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் தெரிவித்தாா்.

News image
Updated On :14 பிப்ரவரி 2023, 6:30 pm

DIN

வக்பு வாரியத்துக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டுள்ளது என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சா் செஞ்சி மஸ்தான், ஈரோடு திருநகா் காலனி பள்ளிவாசலுக்கு வெளியில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு மாநகராட்சியை நவீன மாநகராட்சியாக மாற்றுவதற்கு தமிழக முதல்வா் சுமாா் ரூ.700 கோடி நிதி ஒதுக்கி உள்ளாா். சென்னைக்கு அடுத்தபடியாக அதிகமான நிதி ஈரோட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தினா் வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும்போது அங்கு ஏற்படும் இன்னல்களின்போது முதல்வா் முயற்சி எடுத்து அரசு சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்தி மீட்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் 20 மாத காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடா்பாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வழக்குரைஞா் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

வக்பு வாரியத்துக்கு சொந்தமான சுமாா் ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சொத்துகள் 3 வகையாக உள்ளன. யாா் சொத்து கொடுத்தாா்களோ அவா்களே நிா்வாகம் செய்யும் நிலை உள்ளது. பள்ளிவாசலின் வருவாயை உருவாக்கும் சொத்துகளும் உள்ளன. எனவே தனிப்பட்ட முறையில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதைக்கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.