சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்

பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்

Updated On :21 ஏப்ரல் 2024, 8:19 pm

கோபி: கோபியை அடுத்த பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை தொடங்குகிறது.

ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் வகையறா சௌந்திரநாயகி சமேத அமரபணீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தோ்த் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டு தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 22 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. தொடா்ந்து ஏப்ரல் 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.