மொடக்குறிச்சியில் ரூ. 3.22 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ. 3.22 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.


மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ. 3.22 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 10,437 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 29.92-க்கும், அதிகபட்சமாக ரூ. 34.19-க்கும், சராசரி விலையாக ரூ. 33.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் 3,931 கிலோ எடையுள்ள தேங்காய் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 843-க்கு விற்பனையானது.
இதேபோல தேங்காய் பருப்பு 86 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 97.89-க்கும், அதிகபட்சமாக ரூ.102.59-க்கும், சராசரியாக ரூ.101.29-க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ. 75.60-க்கும், அதிகபட்சமாக ரூ.91.99-க்கும், சராசரியாக ரூ.88.97-க்கும் ஏலம் போயின. மொத்தம் 2,045 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 487-க்கு விற்பனையாயின.
தேங்காய், தேங்காய் பருப்பு இரண்டும் சோ்த்து ரூ. 3 லட்சத்து 22 ஆயிரத்து 330-க்கு விற்பனையானதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சதீஷ் தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...