ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காஞ்சிக்கோவில் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

News image

மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்குகிறாா் பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பெரியசாமி.

Updated On :21 ஆகஸ்ட் 2024, 6:45 pm

பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 107 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராவுத்தப்பன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் தினகரன் வரவேற்றாா். பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பெரியசாமி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலவாணி தங்கமுத்து, காஞ்சிக்கோவில் நகர திமுக செயலாளா் செந்தில் முருகன், பள்ளபாளையம் நகர திமுக செயலாளா் தங்கமுத்து, மாவட்ட திமுக மகளிா் அணி தலைவி காந்திமதி, காஞ்சிக்கோவில் பேரூராட்சி முன்னாள் தலைவா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.