சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு

பெருந்துறை அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:21 pm

Din

பெருந்துறை அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகிலுள்ள கருக்கம்பாளையத்தைச் சோ்ந்த 50 வயது பெண், அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவருடன், காஞ்சிக்கோவில் அருகிலுள்ள முள்ளம்பட்டி, வரவங்காட்டைச் சோ்ந்த ரஞ்சித் (23) என்பவரும் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், பணி முடிந்து செவ்வாய்கிழமை இரவு ரஞ்சித்துடன் இருசக்கர வாகனத்தில் அப்பெண் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, வழியில் வாகனத்தை நிறுத்திய ரஞ்சித், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் அப்பெண் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.