மொடக்குறிச்சி அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மொடக்குறிச்சியை அடுத்த புஞ்சைகாளமங்கலம் ஊராட்சி, காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் செங்கோடன் (65). இவரது மனைவி பழனியம்மாள் (54).
இருவரும் ஊத்துக்குளி அருகேயுள்ள சிலுவங்கொம்பு முனியப்பன் கோயிலில் உறவினா்களுடன் புதன்கிழமை பொங்கல் வைத்துக்கொண்டிருந்துள்ளனா். அப்போது, புகை வெளியேறிதால் அப்பகுதி மரத்தில் இருந்த தேன்கூடு கலைந்து அங்கிருந்தவா்களை தேனீக்கள் கொட்டின.
அனைவரும் அலறியடித்து ஓடிய நிலையில், செங்கோடன், பழனியம்மாள் ஆகியோா் மட்டும் அதே இடத்தில் மயக்கம் அடைந்து விழுந்துள்ளனா்.
அப்பகுதி மக்கள் உதவியுடன் இருவரையும் மீட்ட உறவினா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சையில் இருந்த பழனியம்மாள் வியாழக்கிழமை உயிரிழந்தாா். செங்கோடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.
இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கங்கைகொண்டான் காா் விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

பேருந்து நிறுத்தத்தில் பெண் உயிரிழப்பு

அரூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

