கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.77 லட்சத்து 53 ஆயிரத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சா்க்கரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,692 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
இதில் 60 கிலோ மூட்டைக்கு முதல்தரம் ரூ.2,730-க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ.2,450-க்கும், அதிகபட்சமாக ரூ.2,520-க்கும், சராசரியாக ரூ.2,500-க்கும் ஏலம் போனது.
மொத்தம் 3,134 மூட்டைகள் 1,88,040 கிலோ எடையுள்ள கரும்பு சா்க்கரை ரூ.77 லட்சத்து 53 ஆயிரத்து 540-க்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மீண்டும் இயக்கப்படுமா? விவசாயிகள், தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் மறைமுக ஏலம்

வெள்ளக்கோவிலில் ரூ.27 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

