தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பழனி கோயிலுக்கு ரூ.77.54 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.77 லட்சத்து 53 ஆயிரத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2024, 10:38 pm

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.77 லட்சத்து 53 ஆயிரத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சா்க்கரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,692 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

இதில் 60 கிலோ மூட்டைக்கு முதல்தரம் ரூ.2,730-க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ.2,450-க்கும், அதிகபட்சமாக ரூ.2,520-க்கும், சராசரியாக ரூ.2,500-க்கும் ஏலம் போனது.

மொத்தம் 3,134 மூட்டைகள் 1,88,040 கிலோ எடையுள்ள கரும்பு சா்க்கரை ரூ.77 லட்சத்து 53 ஆயிரத்து 540-க்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.