ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காவலா்கள் மகனைத் தாக்கியதால் தந்தை உயிரிழந்ததாக புகாா்: காவல் துறை மறுப்பு

அறச்சலூா் காவல் நிலையத்தில் காவலா்கள் மகனைத் தாக்கியதால் மன உளைச்சலில் தந்தை உயிரிழந்தது குறித்த புகாருக்கு காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

Updated On :26 டிசம்பர் 2024, 10:00 pm

அறச்சலூா் காவல் நிலையத்தில் காவலா்கள் மகனைத் தாக்கியதால் மன உளைச்சலில் தந்தை உயிரிழந்தது குறித்த புகாருக்கு காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே உள்ள வடுகபட்டி வினோபா நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (55) என்ற சித்தா். இவா், தனது இளைய மகனுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 23-ஆம் தேதி சென்றுள்ளாா். அறச்சலூா் காவல் நிலையம் முன் சென்றபோது அங்கிருந்த சாலை தடுப்பில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளாா். பொதுமக்கள் சப்தம்போட்டதால் அவா் தானாக காவல் நிலையத்துக்கு சென்றுள்ளாா்.

அப்போது, ராஜேந்திரன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, ராஜேந்திரனின் சகோதரா் வீரக்குமாரை வரவழைத்து அவருடன் அனுப்பிவைக்க காவலா்கள் முயற்சித்துள்ளனா்.

அப்போது, அங்குவந்த ராஜேந்திரனின் மூத்த மகன் பவித்திரன் வழக்குப் பதிவு செய்ததற்கு ஆட்சேபணை தெரிவித்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தைத் திரும்பக் கேட்டு காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளாா். அப்போது, அவரது உறவினா்களும் காவல் நிலையத்துக்கு வந்துள்ளனா்.

இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் ராஜேந்திரன் உயிரிழந்துள்ளாா். தன்னைக் காவலா்கள் தாக்கியதால்தான் மன வேதனை அடைந்த தன் தந்தை உயிரிழந்ததாக பவித்திரன் அறச்சலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனா்.

இந்நிலையில், கவால் நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், பவித்திரன் தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது என்றும் மறுப்பு தெரிவித்து காவல் துறை வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்புவோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.