ஈரோடு ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் கோயில் குண்ட திருவிழா

ஈரோடு பெரிய அக்ரஹாரம் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் கோயில் குண்ட திருவிழா நடைபெற்றது.
குண்ட திருவிழா
குண்ட திருவிழா

ஈரோடு பெரிய அக்ரஹாரம் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாயொட்டி மாரியம்மனுக்கு 15-ஆம் தேதியும் காளியம்மனுக்கு 20-ஆம் தேதியும் பூச்சாற்றுதலன் திருவிழா தொடங்கியது.

விழாவையொட்டி 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாரியம்மன் கலச பூஜையும் 26-ஆம் தேதி திங்கள்கிழமை வாணி அம்மன் கோவில் பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் குண்டம் சிறப்பு நிகழ்ச்சியும் தலைமை பூசாரிகள் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

28ஆம் தேதி புதன்கிழமை இன்று பொங்கல் விழா மற்றும் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். 29ஆம் தேதி வியாழக்கிழமை நாளை கம்பம் பிடுங்கும் மஞ்சள் நீராட்டு விழா உடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com