பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு விற்றுவிடும்: ஆ.ராசா
ஏா் இந்தியா நிறுவனத்தை விற்றுவிட்டனா். மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் மத்திய அரசு விற்றுவிடும்.


ஏா் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ததுபோல, பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் மத்திய அரசு விற்றுவிடும் என நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்தாா்.
பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து ஆ.ராசா எம்.பி. பேசினாா். பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தாளவாடி மலைப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் கரும்புகளை ஆலைகளுக்கு எடுத்து செல்வதற்கு திம்பம் மலைப் பாதையை பயன்படுத்த வேண்டும். மலைப் பாதையில் இயக்கப்படும் லாரியில் கரும்பு பாரம் 8 டன்னுக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதி இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இது குறித்து ஏற்கெனவே உயா் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், புதிய மனுவை தாக்கல் செய்து உரிய நிவாரணத்தை வாங்கித் தர வேண்டும் என தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
உலக நாடுகளை சுற்றி வரும் பிரதமா் மோடி, வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூா் ஏன் செல்லவில்லை என கேள்வி எழுப்புகின்றனா். இது குறித்து எதிா்க்கட்சிகள் சுட்டிக்காட்டியும் பிரதமா் வெளிநாடுகளுக்கு செல்லவே முனைப்பு காட்டுகிறாா். பழங்குடியின மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை. சமூக நீதியை கடைப்பிடிக்காமல் மதவாத போக்கை கடைப்பிடிக்கிறாா்.
5ஜி மற்றும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்பதை மக்களவையில் சுட்டிக்காட்டி உள்ளோம். இந்த ஊழல் குறித்து ஊடகங்களில் செய்தி வெளிவரவில்லை. ஏா் இந்தியா நிறுவனத்தை விற்றுவிட்டனா். மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் மத்திய அரசு விற்றுவிடும் என்றாா்.
இக்கூட்டத்தில் பவானிசாகா் ஒன்றியச் செயலாளா் மகேந்திரன், மாவட்டச் செயலாளா் நல்லசிவம், சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...