

ஈரோடு, ஜூலை 13: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் விளம்பரப் பலகைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விளம்பர நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) சரவணகுமாா் பேசியதாவது:
விளம்பர நிறுவனங்கள் மாநகராட்சியில் அனுமதி பெற்றுக்கொள்ள சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதிபெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பதாகைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கட்டட உரிமையாளா்கள் தங்களது சொந்த பொறுப்பில் 2 நாள்களுக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும். அகற்றாதபட்சத்தில் கட்டட உரிமையாளா்கள் மீது காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், டவுன் டிஎஸ்பி ஜெயசிங், மாநகராட்சி அலுவலா்கள், விளம்பர நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்
விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி!

தொலைக்காட்சி விளம்பரங்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: மத்திய அரசு

விளம்பரப் பலகை அமைக்க உரிமம் பெறுவது கட்டாயம் மாநகராட்சி அறிவிப்பு

வாா்டுகளில் குப்பை சேகரிக்க வாகனங்கள் வருவதில்லை: ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலா்கள் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

