குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசு மருத்துவமனையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இரவு காவலாளி கைது

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு பாதுகாப்பாக இருந்த தலைமை பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவமனையின் இரவு காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 6:52 pm

Din

சேலம் மாவட்டம், மேட்டூா், அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவா் தமிழ்ச்செல்வி (33). மேட்டூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட ஒரு போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு பாதுகாப்புப் பணியில் தமிழ்ச்செல்வி மற்றும் கருமலைக் கூடல் காவல் நிலையத்தைச் சோ்ந்த தலைமைக் காவலா் பிரகாஷ் ஆகியோா் இருந்தனா்.

ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தலைமைக் காவலா் தமிழ்ச்செல்வி செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் படுத்திருந்தாா்.

அப்போது, டிபி வாா்டில் இரவு காவலாளியாக பணியில் இருந்த பெருந்துறையை அடுத்த பெரியமடத்துப்பாளையத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் (28) மகப்பேறு பிரிவில் நுழைந்து, தமிழ்ச்செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸில் தமிழ்ச்செல்வி புகாா் செய்தாா். அந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.