மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மலைக் கிராமத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை

அந்தியூா் அருகே உள்ள மலைக் கிராமத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கியது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துக்கு வரவேற்பு அளித்த மலைவாழ் மக்களுடன் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

Published On :

பவானி: அந்தியூா் அருகே உள்ள மலைக் கிராமத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கியது.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காக்காயனூா் மலைக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். வனப் பகுதியில் உள்ள பாலம் சேதமடைந்ததாலும், கரோனா பாதிப்பாலும் இப்பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்து.

இந்நிலையில், பாலத்தை சீரமைத்து மீண்டும் பேருந்து இயக்கக் கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், சேதமடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து காக்காயனூா் மலைக் கிராமத்துக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கியது. இதனை, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடக்கிவைத்தாா்.

அந்தியூா் பேருந்து நிலையத்தில் இருந்து இக்கிராமத்துக்கு காலை, மாலை வேளைகளில் இப்பேருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ரமேஷ், அந்தியூா் வனச் சரக அலுவலா் முருகேசன், ஊராட்சித் தலைவா்கள் குருசாமி, சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.