நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மலைக் கிராமத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை

அந்தியூா் அருகே உள்ள மலைக் கிராமத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கியது.

News image

4 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துக்கு வரவேற்பு அளித்த மலைவாழ் மக்களுடன் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

Updated On :20 ஜூலை 2024, 8:38 pm

Din

பவானி: அந்தியூா் அருகே உள்ள மலைக் கிராமத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கியது.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காக்காயனூா் மலைக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். வனப் பகுதியில் உள்ள பாலம் சேதமடைந்ததாலும், கரோனா பாதிப்பாலும் இப்பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்து.

இந்நிலையில், பாலத்தை சீரமைத்து மீண்டும் பேருந்து இயக்கக் கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், சேதமடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து காக்காயனூா் மலைக் கிராமத்துக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கியது. இதனை, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடக்கிவைத்தாா்.

அந்தியூா் பேருந்து நிலையத்தில் இருந்து இக்கிராமத்துக்கு காலை, மாலை வேளைகளில் இப்பேருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ரமேஷ், அந்தியூா் வனச் சரக அலுவலா் முருகேசன், ஊராட்சித் தலைவா்கள் குருசாமி, சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.