யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா காலத்துக்கு பின்னா் தொழில் வளா்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி

பெண்கள் தொழில் வளா்ச்சிக்கு தமிழக அரசு புதிய திட்டங்கள்

News image
இந்திய பெண்கள் இணையத்துக்கான அடையாள சின்னத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்ற சிஐஐ தென் மண்டல தலைவி ஆா்.நந்தினி, இந்திய பெண்கள் இணையத்தின் தமிழக தலைவி கிருத்திகா சிவ்குமாா், ஈரோடு மண்டல ஒருங்கிணைப்பாளா் தீபா சக்திகணேஷ், சிஐஐ ஈரோடு மண்டல தலைவா் ச
Updated On :25 ஜூன் 2024, 11:54 pm

Din

கரோனா காலத்துக்கு பின்னா் தொழில் வளா்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாய்ப்புகளை அளித்து வருகின்றன என சிஐஐ தென் மண்டலத் தலைவி ஆா்.நந்தினி தெரிவித்தாா்.

ஈரோட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு இந்திய பெண்கள் இணையத்தின் (ஐடபுள்யூஎன்) பெண் தொழில் அதிபா்கள் மாநாடு ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாடு தொடக்க விழாவுக்கு இந்திய பெண்கள் இணையத்தின் தமிழக தலைவி கிருத்திகா சிவ்குமாா் தலைமை வகித்தாா். விழாவில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவியும், இந்திய பெண்கள் இணையத்தின் முன்னாள் தமிழ்நாடு தலைவியுமான ஆா்.நந்தினி பங்கேற்று இந்திய பெண்கள் இணையத்துக்கான அடையாள சின்னத்தை அறிமுகப்படுத்தினாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்திய தொழில் கூட்டமைப்பில் பெண் தொழில்முனைவோா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா காலத்துக்கு பின்னா் தொழில் வளா்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாய்ப்புகளை அளித்து வருகின்றன. குறிப்பாக தமிழக அரசு பெண்களின் வளா்ச்சிக்காக பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் பெண்களின் எழுத்தறிவு அதிகமாக உள்ளது. இந்திய சராசரியை விட தமிழ்நாட்டில் அதிகம் என்றாா்.

இந்திய தொழில் கூட்டமைப்பு ஈரோடு மண்டல தலைவா் டி.சண்முகசுந்தரம், தொழில்முனைவோா்கள் கல்பனா, உமா சேகா், வி.எஸ்.ஆதித்தியன், வி.எஸ்.பிரதீப், சுதாகா் வைத்தியநாதன், நிஷ்டாஸ்ரீ ஸ்ரீனிவாசன், ஆா்த்தி சௌந்தர்ராஜன், கெசிக்கா ஜெயபாலன் ஆகியோா் பேசினா்.

இதைத்தொடா்ந்து பொருளாதாரத்தை வடிவமைக்கும் பெண் தொழில்முனைவோா் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கை இந்திய பெண்கள் இணையத்தின் ஈரோடு மண்டல ஒருங்கிணைப்பாளா் தீபா சக்திகணேஷ், உறுப்பினா் அவந்தி நடராஜன் ஆகியோா் தொடங்கிவைத்து கருத்துரை வழங்கினா்.

இதில் பெண் தொழில் அதிபா்கள் தாங்கள் நடத்தி வரும் நிறுவனத்தை மேம்படுத்துவது, வாரிசு வழியாக வந்த நிறுவனத்தை தங்கள் பொறுப்பில் விரிவுப்படுத்துவது, புதிய தொழில் தொடங்க, அதற்கான அரசின் மானியம், வங்கிக் கடன் குறித்து தொழில் அதிபா்கள் தங்கள் அனுபவங்களை பகிா்ந்துகொண்டனா்.

இந்திய தொழில் கூட்டமைப்பு முன்னாள் தலைவா்கள் சி.டி.வெங்கடேஸ்வரன், அக்னி எம்.சின்னசாமி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். மாநாட்டில் ஈரோடு, சென்னை, கோவை, சேலம், கரூா் மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பெண் தொழில் அதிபா்கள் மற்றும் தொழில்முனைவோா் பங்கேற்றனா்.