குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

11 ஊராட்சி ஒன்றியங்கள், 13 பேரூராட்சிகளில் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்

ஈரோடு மாவட்டத்தில் அயோத்திதாச பண்டிதா் திட்டம் மூலம் 62 பணிகளில் 58 பணிகள் நிறைவு

News image
Updated On :25 ஜூன் 2024, 11:46 pm

Din

ஈரோடு மாவட்டத்தில் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் 11 ஊராட்சி ஒன்றியங்கள், 13 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

இது குறித்து ஊரக வளா்ச்சி மற்றும் பேரூராட்சிகள் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் நகா்ப்புற பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடா் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதிசெய்து முழுமையான சமூக, பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்த அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிா்வாக அனுமதியும், 2023-2024-ஆம் நிதியாண்டுக்கு ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடும் செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, அந்தியூா், பவானி, பவானிசாகா், ஈரோடு, கோபி, கொடுமுடி, நம்பியூா், பெருந்துறை, சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய 11 ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டுக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முதல் தவணையாக ரூ. 60 லட்சமும், இரண்டாம் தவணையாக ரூ. 70 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட 62 பணிகளில் 58 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் மூலமாக புதிய ஆழ்குழாய் கிணறு தோண்டி, மோட்டாா் பொருத்தி குடிநீா் விநியோகிக்கும் பணி, தெருவிளக்குகள் அமைத்தல், சமுதாயக் கூடம் அமைத்தல், சிமென்ட் சாலைகள் அமைத்தல், மயான கூரை அமைத்தல், சாலை மேம்பாடு, வடிகால் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானிசாகா், சென்னசமுத்திரம், காஞ்சிக்கோவில், காசிபாளையம், கொல்லன்கோவில், லக்கம்பட்டி, நெருஞ்சிப்பேட்டை, ஊஞ்சலூா், வாணிப்புத்தூா், வெள்ளோட்டாம்பரப்பு ஆகிய 13 பேரூராட்சிகளுக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முதல் தவணையாக ரூ. 51 லட்சமும், இரண்டாவது தவணையாக ரூ. 70 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமென்ட் சாலைகள் அமைத்தல், ஆழ்குழாய் கிணறு, வடிகால் உள்ளிட்ட 13 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றனா்.