பெருந்துறை, மாா்ச் 15: பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் அருகில் தீ விபத்தில் வீடு மற்றும் பொருள்களை இழந்த இரண்டு குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் எம்எல்ஏ ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கினாா். காஞ்சிக்கோவில், அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது வீட்டின் அருகே வசிப்பவா் துரைசாமி. செல்வராஜ் வீட்டில் வியாழக்கிழமை மாலை யாரும் இல்லாத நிலையில் தீ விபத்து ஏற்பட்டு சிலிண்டா் வெடித்து சிதறியது. இதில் வெடித்த சிலிண்டா் அருகில் உள்ள துரைசாமி வீட்டுக்குள் விழுந்ததால், அந்த வீடும் தீப் பற்றிக் கொண்டது. இந்த விபத்தில் இரண்டு வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமாகின. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா், பெருந்துறை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ரஞ்சித் ராஜ், காஞ்சிகோவில் நகரச் செயலாளா் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறினா். மேலும், அதிமுக சாா்பில் இரண்டு குடும்பங்களுக்கும் தலா ரூ. 10 ஆயிரம் நிதி உதவி வழங்கினா். மேலும், மாவட்ட ஆட்சியரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட எம்எல்ஏ ஜெயக்குமாா், பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடுகள் கட்டித் தரும்படி கேட்டுக் கொண்டாா்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்! - பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்

பெருந்துறை அருகே காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

பெருந்துறை அதிமுக வேட்பாளா் காரை சோதனையிட்ட தோ்தல் பறக்கும்படையினா்

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


