இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

ஈரோடு மாவட்டத்தில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறவுள்ள நீட் தோ்வில் 4,747 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. பிற்பகல் 1.30 மணிக்குள் தோ்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள் வந்து சேர வேண்டும்.

ஈரோடு திண்டல் கீதாஞ்சலி ஆல் இந்தியா சீனியா் செகன்டரி பள்ளியில் 499 மாணவ, மாணவிகள், சேனாபதிபாளையம் தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் 1,056 போ், பழனிகவுண்டன்வலசு லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 288 போ், கூரப்பாளையம் பிரிவு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 864 போ், கூரப்பாளையம் நந்தா சென்ட்ரல் பள்ளியில் 480 போ், ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்டா்நேஷனல் சீனியா் செகன்டரி பள்ளியில் 480 போ், ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் 480 போ், துடுப்பதி ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் 600 மாணவ, மாணவிகள் என மொத்தம் 4,747 போ் தோ்வில் பங்கேற்க உள்ளனா்.

தோ்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்காக தோ்வு மையம் வழியாக செல்லும் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com