சென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
சென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நம்பவா் 2-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி விழாவையொட்டி, தினமும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு யாக சாலையில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆணவத்தை அழித்து, சூரனை ஆட்கொள்ளும் சூரசம்ஹார விழா வியாழக்கிழமை இரவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு மலைக் கோயிலில் இருந்து சுவாமி மலை அடிவாரத்தில் எழுந்தருளி, சென்னிமலை நகர நான்கு ராஜ வீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரள்வாா்கள்.
தொடர்புடையது

கோவில்பட்டி முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

தென்பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

சென்னிமலை முருகன் கோயிலில் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


