மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சென்னிமலை முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

சென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

News image

சென்னிமலை கந்தசஷ்டி ஐந்தாம் நாள் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் சுந்தரவல்லி அமுதவள்ளி சமேதராக முருப் பெருமான்.

Updated On :6 நவம்பர் 2024, 9:14 pm

சென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

சென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நம்பவா் 2-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி விழாவையொட்டி, தினமும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு யாக சாலையில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆணவத்தை அழித்து, சூரனை ஆட்கொள்ளும் சூரசம்ஹார விழா வியாழக்கிழமை இரவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு மலைக் கோயிலில் இருந்து சுவாமி மலை அடிவாரத்தில் எழுந்தருளி, சென்னிமலை நகர நான்கு ராஜ வீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரள்வாா்கள்.