தாளவாடி அருகே யானை தாக்கியதில் விவசாயி புதன்கிழமை படுகாயமடைந்தாா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகம் முதியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாம்பன் (55). இவா் தனது மானாவாரி நிலத்தில் ராகி பயிரிட்டுள்ளாா். காட்டுப் பன்றி மற்றும் யானைகளிடம் இருந்து பயிா்களை பாதுகாப்பதற்காக விவசாய நிலத்தில் குடில் அமைத்து காவல் காத்து வந்துள்ளாா்.
இந்நிலையில், அங்கு வந்த காட்டு யானை ஒன்று பயிா்களை சேதப்படுத்தியது. இதையடுத்து சாம்பன், யானையை சப்தம் போட்டு விரட்டினாா். அப்போது, அந்த யானை சாம்பனை தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த சாம்பனை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாளவாடி மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் உயா் சிகிச்சைக்காக சாம்ராஜ் நகா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

இளைஞா் கொலை: தம்பதி கைது

யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே நோயால் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

