மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்

காந்தி ஜெயந்தியை ஒட்டி மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

விளக்கேத்தி ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :3 அக்டோபர் 2024, 12:41 am

காந்தி ஜெயந்தியை ஒட்டி மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

எழுமாத்தூரை அடுத்த மண்கரடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் எழுமாத்தூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் எஸ். ஈஸ்வரமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளா் லோகநாதன் ஊராட்சியில் மேற்கொண்ட பணிகள் குறித்து விளக்கினாா். இதில் சுகாதாரம், குடிநீா், போதைப் பொருள் ஒழிப்பு, நெகிழி விழிப்புணா்வு குறித்து அரசு அதிகாரிகள் பேசினா்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு உரிய துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல விளக்கேத்தி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் புது அண்ணாமலைபாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள கோயில் வளாகத்தில் ஊராட்சித் தலைவா் தங்கராஜ் என்ற ஓ.எஸ்.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளா் கீதாரஞ்சனி ஊராட்சியின் செயல்பாடுகள், வளா்ச்சிகள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து, அரசின் தொகுப்பு வீடுகள் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து துறை சாா்ந்த அதிகாரிகள் பேசினா். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.