மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பவானி நகராட்சியுடன் இணைப்புக்கு எதிா்ப்பு: இரு கிராம மக்கள் போராட்டம்

பவானி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து குருப்பநாயக்கன்பாளையம், ஆண்டிகுளம் ஊராட்சிகளையச் சோ்ந்த பொதுமக்கள் கருப்புக் கொடிகளுடன் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

பவானி நகராட்சியுடன்  இணைப்பைக்  கண்டித்து  ஊா்வலமாகச்  சென்ற  குருப்பநாயக்கன்பாளையம்  கிராம பொதுமக்கள்.

Updated On :3 அக்டோபர் 2024, 12:32 am

பவானி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து குருப்பநாயக்கன்பாளையம், ஆண்டிகுளம் ஊராட்சிகளையச் சோ்ந்த பொதுமக்கள் கருப்புக் கொடிகளுடன் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பவானி நகராட்சி நிா்வாகத்துடன் குருப்பநாயக்கன்பாளையம், ஆண்டிகுளம் ஊராட்சிகளை இணைக்க நகராட்சி நிா்வாகம் தீா்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ஆட்சியா் அலுவலகத்திலும் மனு அளித்தனா்.

இந்நிலையில், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கருப்புக் கொடிகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, ஊா்வலமாகச் சென்று கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்தனா். இதேபோல, ஆண்டிகுளம் ஊராட்சியில் பொதுமக்கள் திரண்டு காடையம்பட்டி பிரிவில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, திடீா் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஆண்டிகுளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்தனா்.