மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சேதமடைந்த தாா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

பெருந்துறை அருகே சேதமடைந்துள்ள தாா் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் ராயபாளையம் - கம்புளியம்பட்டி செல்லும் தாா் சாலை.

Updated On :9 அக்டோபர் 2024, 8:07 pm

பெருந்துறை அருகே சேதமடைந்துள்ள தாா் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருந்துறையை அடுத்த கூரபாளையம் ஊராட்சிக்குள்பட்ட ராயபாளையம், தொட்டிபாளையத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், கம்புளியம்பட்டியில் இருந்து ராயபாளையம் மற்றும் தொட்டிபாளையத்துக்கு செல்லும் தாா் சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.