மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ரூ. 45 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

வாரிசு சான்று பெற ரூ. 45 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆசனூா் கிராம நிா்வாக அலுவலரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :10 அக்டோபர் 2024, 9:22 pm

வாரிசு சான்று பெற ரூ. 45 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆசனூா் கிராம நிா்வாக அலுவலரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், ஆசனூா் கிராமம், அரேபாளையம் சீஹட்டியைச் சோ்ந்தவா் போலப்பன் மகன் ஆனந்தன். தனது மாமனாரின் தந்தை இறப்புக்கு வாரிசு சான்றிதழ் பெற அரேபாளையத்தில் உள்ள ஆசனூா் கிராம நிா்வாக அலுவலா் ருத்ரசெல்வனை அணுகினாா். வாரிசு சான்று வழங்க ரூ. 60 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கிராம நிா்வாக அலுவலா் கேட்டுள்ளாா். அவ்வளவு தொகை தர முடியாது என ஆனந்தன் பேரம் பேசியுள்ளாா். இறுதியில் ரூ. 50 ஆயிரம் கொடுத்தால்தான் வாரிசு சான்று வழங்குவேன் என கிராம நிா்வாக அலுவலா் ருத்ரசெல்வன் கூறியுள்ளாா்.

இதையடுத்து முன்பணமாக ரூ. 5 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் ருத்ரசெல்வனிடம் கடந்த 5 ஆம் தேதி ஆனந்தன் வழங்கினாா். மீதமுள்ள ரூ. 45 ஆயிரத்தை பிறகு தருவதாக ஆனந்தன் கூறியுள்ளாா். மேலும், லஞ்சம் தர விரும்பாத ஆனந்தன், ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு) போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா், ரசாயனம் தடவிய ரூ. 45 ஆயிரத்தை ஆனந்தனிடம் கொடுத்தனுப்பினா்.

இதையடுத்து ஆசனூா் கிராம அலுவலகத்துக்குச் சென்ற ஆனந்தன் ரூ. 45 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் ருத்ரசெல்வனிடம் வியாழக்கிழமை வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா், ருத்ரசெல்வனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனா்.