மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இடைநிற்றல் மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க ஆட்சியா் அறிவுறுத்தல்

இடைநிற்றல் மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

News image

கண்ணாங்காட்டுப்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

Updated On :17 அக்டோபர் 2024, 12:18 am

இடைநிற்றல் மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நம்பியூா் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நம்பியூா் நில வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து நம்பியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பாா்வையிட்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்படும் நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அத்தியாவசிய பொருள்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, எலத்தூா் செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு கொண்டு நோயாளிகள் விவரம், மருந்துகள் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்தாா். மேலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து எலத்தூா் பேரூராட்சி கண்ணாங்காட்டுபாளையம் பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு, குழந்தைகளின் உயரம், எடை மற்றும் கற்றல் திறன் ஆகியவற்றை பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்க தயாராக இருந்த முட்டை மற்றும் சத்துமாவினை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து எலத்தூா் பேரூராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் பெரிய குளத்தைப் பாா்வையிட்டாா். மேலும், மலையபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் மற்றும் இடைநிற்றல் மாணவா்கள் குறித்து கேட்டறிந்து, இடைநிற்றல் மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

நம்பியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.99.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தையும் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து நம்பியூா் காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுகளின்போது உதவி இயக்குநா் (நில அளவை) ஹரிதாஸ், நம்பியூா் வட்டாட்சியா் ஜாகிா் உசேன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாந்தி, சரஸ்வதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.