மேட்டூா் வலதுகரை வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
மேட்டூா் வலதுகரை வாய்க்காலின் வா்ணபுரம் கிளை வாய்க்காலை ஆக்கிரமித்து, கழிவுநீா் கால்வாய் உயரமாகக் கட்டப்பட்டதால் கடைமடைக்குத் தண்ணீா் செல்வதில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா். இந்நிலையில், ஈரோடு மாவட்ட துணை ஆட்சியா் (பயிற்சி) கா.சிவபிரகாஷ், வாய்க்காலின் கடைமடை பகுதியில் நேரில் ஆய்வு செய்தாா்.
பவானி வட்டாட்சியா் சித்ரா, நீா்வள ஆதாரத் துறை உதவிப் பொறியாளா் எஸ்.ஜெயராஜ், பவானி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரதராஜ், செந்தில்குமாா், ஒன்றியப் பொறியாளா் ஜெயகாந்தன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா். அப்போது, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கவின் பழனிசாமி, பொன்னுசாமி, தனபால் உள்ளிட்டோா், வாய்க்காலை ஆழப்படுத்தி தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனா்.
தொடர்புடையது

நிலத்தடி நீா்மட்டம் உயா்வு, பாசன நீா் உறுதி

தபால் வாக்கு பெறும் பணி தொடக்கம்! உறவினா் வீட்டில் ஆட்சியா் ஆய்வு!

பி.ஏ.பி. வாய்க்காலில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் விளையாடும் மாணவா்கள்

பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு: வீணாகி சாலையில் ஓடிய தண்ணீா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


