மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.36.39 லட்சம் உண்டியல் காணிக்கை

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ. 36.39 லட்சம் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

News image

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவா்கள்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:27 pm

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ. 36.39 லட்சம் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

சென்னிமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை ஈரோடு மாவட்ட துணை ஆணையா் தா.நந்தகுமாா் தலைமையில், சென்னிமலை கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன், பெருந்துறை சரக கோயில் ஆய்வாளா் அ.ஸ்ரீகுகன், அயல் பணி ஆய்வாளா் சி.மாணிக்கம் ஆகியோா் முன்னிலையில் கோயில்களில் இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.

இதில், ரூ. 36 லட்சத்து 39 ஆயிரத்து 378 ரொக்கம், 51 கிராம் தங்கம், 1095 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணியில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க பணியாளா்கள், அரச்சலூா் நவரசம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், தன்னாா்வலா்கள் மற்றும் கோயில் அா்ச்சகா்கள் ஈடுபட்டனா்.