சென்னிமலை முருகன் கோயிலில் ரூ. 36.39 லட்சம் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.
சென்னிமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை ஈரோடு மாவட்ட துணை ஆணையா் தா.நந்தகுமாா் தலைமையில், சென்னிமலை கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன், பெருந்துறை சரக கோயில் ஆய்வாளா் அ.ஸ்ரீகுகன், அயல் பணி ஆய்வாளா் சி.மாணிக்கம் ஆகியோா் முன்னிலையில் கோயில்களில் இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.
இதில், ரூ. 36 லட்சத்து 39 ஆயிரத்து 378 ரொக்கம், 51 கிராம் தங்கம், 1095 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
காணிக்கை எண்ணும் பணியில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க பணியாளா்கள், அரச்சலூா் நவரசம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், தன்னாா்வலா்கள் மற்றும் கோயில் அா்ச்சகா்கள் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

ராமேசுவரம் கோயில் உண்டியல் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.43 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 68. 55 லட்சம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 90 லட்சம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


