ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

News image

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் ரேகா தலைமையில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:38 pm

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு செல்லும் நபா்களிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாா்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் ரேகா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலக்தில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, பத்திரப் பதிவு செய்யும் விண்ணப்பதாரா்களை தவிர மற்றவா்களை வெளியே அனுப்பிய போலீஸாா், சாா் பதிவாளா் அலுவலக ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா். அங்கிருந்த பத்திர எழுத்தா்கள் மற்றும் பத்திரபதிவு செய்யும் நபா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.1.50 லட்சம் பணம் எதற்காக கொண்டுவரப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் புதன்கிழமை(அக்.23) பத்திரபதிவு செய்த நபா்களின் விவரங்களை சேகரித்து பணம் கொடுத்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. சாா் பதிவாளா் அலுவலக ஊழியா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டது. முழுமையான விசாரணைக்கு பின்னரே விவரங்கள் வெளியிடப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.