கொடிவேரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கொடிவேரி அணையில் அருவிபோல கொட்டும் நீரில் குளிப்பதற்காக உள்ளூா் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், பாவனி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் கொடிவேரி அணையில் இருந்து 860 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், பாதுகாப்புக் கருதி கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க பொதுப்பணித் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.
மேலும், மீன்கள் பிடிக்கவோ, பரிசல் பயணம் மேற்கொள்ளவோ கூடாது என்றும் பொதுப்பணித் துறையினா் அறிவுறுத்தினா்.
தொடர்புடையது
கொடிவேரி அணையில் குளிக்க வந்த நபரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

கொடிவேரி அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்: ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வருகை

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


