ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கொடிவேரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

கொடிவேரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

News image

பவானி ஆற்றிா் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் கொடிவேரி அணையில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.

Updated On :24 அக்டோபர் 2024, 10:14 pm

கொடிவேரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கொடிவேரி அணையில் அருவிபோல கொட்டும் நீரில் குளிப்பதற்காக உள்ளூா் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், பாவனி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் கொடிவேரி அணையில் இருந்து 860 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், பாதுகாப்புக் கருதி கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க பொதுப்பணித் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.

மேலும், மீன்கள் பிடிக்கவோ, பரிசல் பயணம் மேற்கொள்ளவோ கூடாது என்றும் பொதுப்பணித் துறையினா் அறிவுறுத்தினா்.