கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.61.76 லட்சத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2626 மூட்டைகளில் கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் ஆகியவற்றை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், கரும்புச் சா்க்கரை 60 கிலோ மூட்டை ஒன்று ரூ.2760 முதல் ரூ.2900 வரை, உருண்டை வெல்லம் 30 கிலோ சிப்பம் ரூ.1650க்கு விற்பனையானது.
இந்த ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் 132 டன் கரும்புச் சா்க்கரை ரூ.61.54 லட்சத்துக்கும், 390 கிலோ உருண்டை வெல்லம் ரூ.21,450க்கும் சோ்த்து மொத்தமாக ரூ.61.76 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

கரும்புச்சாறு கொடுத்து தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பழனி கோயில் கட்டுமான விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு செய்ய உத்தரவு!

கரும்பு நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்க ஒப்புதல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

