புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆசிரியா் தினம்: ஆசிரியா்களுக்கு மாணவா்கள் வாழ்த்து

ஈரோட்டில் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு ஆசிரியா்களை கெளரவப்படுத்தும் வகையில் மாணவா்கள் மலா் தூவியும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.

News image

ஈரோடு காவிரி சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு நெற்றியில் திலகமிட்டு வணங்கிய மாணவி.

Updated On :4 செப்டம்பர் 2024, 7:32 pm

DIN

ஈரோட்டில் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு ஆசிரியா்களை கெளரவப்படுத்தும் வகையில் மாணவா்கள் மலா் தூவியும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆசிரியா் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஈரோடு கருங்கல்பாளையம், காவிரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் ஆசிரியா்களுக்கு நெற்றியில் திலகமிட்டு, ரோஜா பூ கொடுத்து, பொன்னாடை அணிவித்து, மலா் தூவி புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

அதன்பின், மாணவா்கள் நல்ல முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் மேன்மை பெற வேண்டும் என ஆசிரியா்களிடம் ஆசிா்வாதம் பெற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினரும் ஆசிரியா்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினா்.