மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: ஈரோடு மாவட்டத்தில் 21,690 போ் முன்பதிவு

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் 21,690 போ் இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 9:16 pm

Din

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் 21,690 போ் இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான நடப்பு ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளில் புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் நடைபெற உள்ளன. மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 10 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன.

இந்தப் போட்டிகளில் மாநில அளவில் தனி நபா் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்.

குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்க ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்தில் முன்பதிவு செய்திட கடந்த 2 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் 21,690 போ் முன்பதிவு செய்துள்ளனா். போட்டிக்கான ஏற்பாட்டை ஈரோடு மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் சதீஷ்குமாா் தலைமையில் விளையாட்டுப் பிரிவு அலுவலா்கள் செய்து வருகின்றனா்.